தமிழிசையின் கணவரிடம் பணத்தை ஆட்டையப் போட்ட மர்மநபர்கள்..!


தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை. இவருடைய கணவர் சவுந்தரராஜன். பிரபல டாக்டரான இவர், கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு சென்றார்.

அவரது பையில் செல்போன் சார்ஜ் ஏற்றக்கூடிய ‘பவர்பாங்க்’ இருந்தது. அதை எடுத்து வைத்து கொள்ளுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். பின்னர் அவர், கொழும்புக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டு செல்லும்போது யாராவது அந்த பணத்தை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிலைய போலீசில் சவுந்தரராஜன் புகார் செய்து உள்ளார்.

அதன்பேரில் விமான நிலைய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அவரது பணத்தை யார் திருடியது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!