போலீசில் தாயின் 2-வது கணவர் மீது பாலியல் புகார் கூறி அதிர வைத்த சிறுமி..!


கோவை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் 15 வயது சிறுமி புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தாய்க்கு 2 கணவர்கள். தாய், 2 தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறேன். எனது 2-வது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து எனது அம்மாவிடம் கூறியபோது அவர் 2-வது தந்தையை கண்டித்தார். இருந்தாலும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நான் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு போனில் தொடர்பு கொண்டு கூறினேன். அதிகாரிகள் எனது அம்மாவிடம் விசாரணை நடத்தினர். எனது பிறந்த தேதி, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை பெற்றுச்சென்றனர்.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!