இப்படியும் ஒரு பெற்றோரா..? பெண் குழந்தையை பெற்றெடுத்த 14 வயது சிறுமி..!


திருப்பூர் அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இது குறித்து சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்தநாதன். இவரின் மனைவி ரேவதி. இத்தம்பதிக்கு 14 வயதில் மகள் இருக்கிறாள். இக்குடும்பம் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் வசித்து வந்தது. இந்த நிலையில், தம்பதி இருவரும் தங்களின் மகளான சிறுமி ஹேமாவை (பெயர் மாற்றம்) கடந்தாண்டு ஏப்ரல் மாதம் செல்வபாஸ்கர் என்ற உறவினருக்குத் திருமணம் முடித்து வைத்துள்ளனர். 24 வயது இளைஞரான செல்வபாஸ்கரும், 14 வயதேயான சிறுமி ஹேமாவும் சேர்ந்து அதே பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கர்ப்பமடைந்த சிறுமி ஹேமாவுக்கு கடந்த திங்கட்கிழமை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து, நேற்றைய தினம் இரவு தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமி ஹேமாவிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரம் தெரியவரும்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!