மக்களின் துயரங்களுக்கு மருந்தாக இருந்து மறைந்த சாய்பாபா..!


வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. மக்களின் துயரங்களுக்கு விடியலாகவும், அவர்களது இன்னல்களுக்கு மருந்தாகவும் சாய்பாபா பல அற்புதங்களை செய்தார்.

நாட்டில் உள்ள பல்வேறு சாய்பாபா கோயில்களில் விபூதி தான் முக்கிய பிரசாதமாக விளங்குகிறது. இந்துக்களால், கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக போற்றப்படும் சாய்பாபா, தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி தன்னுடைய திவ்ய சக்தியை மக்களுக்கு நிகழ்த்திக்காட்டி பல அதிசய நிகழ்வுகளை நாம் படித்திருப்போம்.

அதேபோல அவர் இந்த பூவுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் தன் பக்தர்களை கண் இமைபோல காத்து வருகிறார். கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்து விட முடியாது.

நம் மனம் பரிபக்குவம் அடைந்திருக்கிறதா என்பதை பரிசீலித்து அதன் பிறகே பாபா நமக்கு தரிசனம் கொடுப்பார். அவர் நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். அதேபோல் மகான்களின் திருவுள்ளம் இருந்தால் தான் நமக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஒருவருக்கு மகான் தரிசனம் தர வேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு மகானின் தரிசனம் கிடைத்துவிடும்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!