அம்பாந்தோட்டை துறைமுக பங்கு உரிமை பகிர்வு உடன்பாட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…!


அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சீன அரசு நிறுவனத்துடன், பங்கு உரிமையைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கூட்டு முயற்சியாக திட்டத்தை முன்னெடுப்பதற்கு, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன், கடந்த ஜூலை 29ஆம் நாள் துறைமுக அதிகார சபை உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கூட்டு முயற்சியாக இயக்குவதற்காக, அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமம் என்றொரு நிறுவனமும், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமக செவைகள் என்றொரு நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாளை தொடக்கம் துறைமுகத்தின் செயற்பாடுகளை இந்த நிறுவனங்கள் கூட்டாக முன்னெடுக்கவுள்ளன. இது தொடர்பான பங்கு உரிமையைப் பகிர்ந்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. – Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!