இலவச உணவு கூப்பனை பெற நெரிசலில் முண்டியத்த 2 மூதாட்டிகள் பரிதாப சாவு..!


மலேசியாவில் வருகிற 5-ந் தேதி சந்திர புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெறும் விழாவில் முதியவர்களுக்கு இலவச உணவு வழங்க தனியார் நிறுவனம் ஒன்று முடிவு செய்தது.

இதற்கான கூப்பன்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்தது. 200 பேருக்கு மட்டுமே இலவச கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் அங்கு குவிந்தனர்.

இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இலவச கூப்பன்களை பெறுவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு சென்றபோது நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர்.

அவர்களில் 78 வயதான லா லொன் நாங் மற்றும் 85 வயதான அக் போக் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 மூதாட்டிகளும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!