2 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி லிப்டுக்குள் சிக்கி தவித்த வேலைக்கார பெண்..!


அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் வாரன் ஸ்டீபன்ஸ். பெரும் கோடீஸ்வரரான இவருக்கு நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் ஆடம்பர சொகுசு வீடு உள்ளது.

இந்த வீட்டில் மரைட்ஸ் போர்ட்டாலிசா (வயது 53) என்கிற பெண் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிகிழமை இரவு இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டின் 5-வது தளத்தில் இருந்து ‘லிப்ட்’ மூலம் கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ‘லிப்ட்’ பாதியில் நின்றுவிட்டது.

வேலைக்கார பெண் மரைட்ஸ் போர்ட்டாலிசா லிப்டுக்குள் சிக்கி இருப்பதை அறியாமல், உரிமையாளர்கள் வார விடுமுறையை கொண்டாட சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து சென்றனர். பின்னர் அவர்கள் திங்கட்கிழமை காலை வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது தான் மரைட்ஸ் போர்ட்டாலிசா லிப்டுக்குள் சிக்கி இருப்பதை அவர்கள் அறிந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து லிப்ட்டில் இருந்து மரைட்ஸ் போர்ட்டாலிசாவை பத்திரமாக மீட்டனர்.

2 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி லிப்டுக்குள் சிக்கி இருந்ததால் சோர்வடைந்த மரைட்ஸ் போர்ட்டாலிசா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!