கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது தாய் மகளுக்கு நேர்ந்த சோகம்..!


கோயிலில் சாமிகும்பிட்டுவிட்டு திரும்பியபோது ரயில் மோதி தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். திருவனந்தபுரம் அருகே உள்ள கரிக்ககத்தை சேர்ந்தவர் அருண்கோபிகுமார். இவரது மனைவி அசுவதி (33). இவர்களது மகள் ஆத்மிகா. நேற்று மாலை அசுவதியும், ஆத்மிகாவும் அருகில் உள்ள ேகாயிலுக்கு சாமிகும்பிட சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

இந்த நேரத்தில் அந்த வழியாக திருவனந்தபுரம்-மங்களூர் ரயில் வந்தது. எதிர்பாராதவிதமாக ரயில் தாய், மகள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசுவதி, ஆத்மிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த இடம் வளைவான பகுதி. ஆகவே ரயில் வருவது தெரியாது. இதனால் தான் விபத்து நடந்தது என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது.-Source: tamilmurasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!