ரஜினியின் அரசியல் வருகையை பங்கமாய் கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்!


ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என்பது முடிவாகாததால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இதே விவகாரத்தை வைத்து பிரபல கிரிக்கெட் வீரரான இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கலாய்த்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் உலகளவில் தகர்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இப்போது பெங்களூர் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இலங்கை தமிழரான இவர் இலங்கையில் ஹட்டனின் தேயிலை தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்


அப்போது, அவரது அரசியல் வருகைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ”அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு ‘ அய்யோ நான் அரசியலுக்கு வருகிறேனா? இந்தியாவில் ரஜினி சொல்வது போல வருகிறேனா வரமாட்டேனா? வருகிறேனா வரமாட்டேனா? எனக் குழப்புவதில் விருப்பமில்லை. எனக்கு அரசியலுக்கு வருவதில் ஆர்வம் இல்ல’ எனக் கூறியுள்ளார்.

ரஜினி அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்து ஓராண்டு ஆகியும் இன்னும் கட்சி ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில் முத்தையா முரளிதரனின் இந்தப்பேச்சு பரபரப்பை கிளப்பி இருகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!