வந்தார்கள்.. வென்றார்கள் – இந்திய அணியை புகழ்ந்த விராட் கோலி மனைவி..!


கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது இந்திய அணிக்கு அனுஷ்கா சர்மா தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, “வந்தார்கள். வென்றார்கள். இந்தக் குழு வரலாற்றை எழுதியிருக்கிறது. வீரர்களுக்கும், பயிற்சி குழுவுக்கும், துணையாக இருந்த ஊழியர்களுக்கும் பெரும் பாராட்டுகள்.

இத்தகைய வெற்றியை அனுபவிக்க எதை துறக்க வேண்டும் எதை நோக்கி கவனத்தை குவிக்க வேண்டும் என்பதில் விடாமுயற்சி தேவை. விராட் கோலி.. அன்பே உன்னை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அதேவேளையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த அணியில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது வெறும் அணி அல்ல இது ஒரு குடும்பம். எனது வெற்றியும் முன்னேற்றமும் இங்கிருந்துதான் தொடங்கியது” எனப் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த ஆண்டு இத்தாலியில் நெருங்கிய உறவுகள் நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: kamadenu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!