கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் – 4 வாலிபர்கள் கைது!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கூனங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவரும் பழகி வந்துள்ளனர். இருவரும் பல்வேறு இடங்களில் பைக்கில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் கல்லூரிக்கு வந்த மாணவியை விஜய் தனது மோட்டார் பைக்கில் ஆதண்டார் கொல்லை சாம்பல் ஏரி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு மாணவியை வலுக்கட்டாயமாகப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி மாணவி நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து விஜய் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பாலியல் பலாத்காரம் கைது

மேலும் நெய்வேலி பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் கல்லூரி மாணவியை விஜய் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து நெய்வேலி டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரராஜ், அம்பேக்கார், சப் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்தனர். மேலும் விஜயிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை விஜயும் அவரது நண்பர்கள் வடக்கு மேலூரைச் சேர்ந்த வேல்முருகன், முரளி, பிரபுராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜய்உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.