திடீர் நெஞ்சுவலி…. அப்பல்லோவில் அட்மிட்டான துரைமுருகன்..!


மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அவரது நினைவை போற்றி பேசிய தி.மு.க. பொருளாளர் துரை முருகன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் துரை முருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார். இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.-Source: maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!