புத்தாண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லாமே லேட்டா தான் வரும்..!


குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்.

நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் துவக்க மாதங்களில் சங்கடங்கள் இருந்தாலும் பிற காலங்களில் நன்மையாக முடியும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிறருக்கு பெரிய தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.


பழைய பிரச்சனை மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்படும். உங்கள் மீது வீண் பழி வரும் வாய்ப்பு உண்டு. வெளிமாநிலத்தின் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.

உத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காது. கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் சிறந்தது. ஊழியர்களால் மதிப்பு உண்டாகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் பெரிய நிறுவனத்தில் உயர்கல்வி கிடைக்கும். மொத்தத்தில் இந்த புது வருடம் உங்களது முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவதாக அமையும்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!