கட்டிலுக்கு அழைத்த நபருக்கு ‘கட்’ செய்து அதிர வைத்த பெண்..!


மும்பையில் 47 வயது பெண்ணுக்கு பக்கத்துவீட்டு இளைஞர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரது பிறப்புறுப்பை அறுத்ததால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

மும்பை தோம்பிவிலி கிழக்கு பகுதியில் நந்திவலியைச் சேர்ந்த பெண் 47 வயதுடையவர். இவர் கணவருடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் துஷார் புஜாரே (27). இவர் தன்னை விட 20 வயது மூத்தவரான அந்த பெண்ணை ஒரு தலையாக விரும்புகிறார்.

இது தொடர்பாக அந்த பெண்ணுக்கு பல மாதங்கள் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதனால் அந்த பெண் கடும் ஆத்திரத்தில் இருந்தார். எனினும் புஜாரே தனது தவறை என்றாவது உணருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இந்நிலையில் புஜாரே அந்த பெண்ணின் கணவரிடம் சென்று உங்கள் மனைவியை நான் விரும்புகிறேன். திருமணம் செய்ய போகிறேன். நீங்கள் அதற்கு ஒத்துழையுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த கணவரோ புஜாரேவை திட்டி விட்டு சென்றுவிட்டார்.

புஜாரேவை தனக்கு பிடிக்க வில்லை என கூறியும் அவர் அந்த பெண்ணிற்கு செக்ஸை தூண்டி விடும் வகையில் நடந்துகொண்டதாக தெரிகிறது. மீண்டும் அந்த பெண்ணின் கணவரிடம் சென்ற புஜாரே உங்கள் மனைவிக்கு தோம்பிவலி பகுதியில் உள்ள இரு உள்ளூர் ஆண்களுடன் தவறான தொடர்பிருக்கிறது என கூறியுள்ளார்.

இதனால் கணவரும் அந்த பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு புஜாரே மீதான ஆத்திரம் தலைக்கேறியது. புஜாரேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினர். உடனே அவரது நண்பர்களை உதவிக்கு அழைத்தார்.

அவர்கள் இருவரும் புஜாரேவுக்கு போன் செய்து லோன் வழங்குவது சம்பந்தமாக பேச வேண்டும் என கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண் புஜாரேவின் பிறப்புறுப்பை அறுத்தார்.

இதனால் அலறிய புஜாரே மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. இதையடுத்து போலீஸாரிடம் சென்று அந்த பெண் உண்மையை ஒப்புக் கொண்டார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!