புத்தாண்டில் பட்டு பட்டுனு பேசும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் வராது!


குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கையில் பணம் சேரவே சேராது.

நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

மனதில் பட்டதை பேசும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் தாமதமாகவே கிடைக்கும். கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை பெற முடியாது.


உத்தியோகங்களில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாக கிடைக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும், அதனால், லாபம் உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

பொது வாழ்வில் உள்ளவரகள் பேச்சில் கவமுடன் இல்லை என்றால், சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் சிறக்க முடியும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கத்தையும், வெற்றியையும் தருவதாக அமையும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!