பெண்களை கொன்று சமைத்து சாப்பிட்டு இறைச்சிக்கு விற்ற கொடூர தம்பதி.!


பிரேசில் நாட்டில் 3 பெண்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்டதோடு, இறைச்சியாக விற்பனை செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் பெல்ட்ராவோ நெக்ரோமொன்டே என்ற நபருக்கு இசபெல் பேரீஸ் மற்றும் ப்ருனா கிறிஸ்டினா ஒலிவேரா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர்.

மூவரும் சேர்ந்து இளம்பெண்களை கொலை செய்ததாக கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜோர்ஜ் கோடரி அல்லது மீன் வெட்டும் கத்தியை கொண்டு இளம்பெண்களை கொலை செய்வார்.பின்னர் அவர்களின் உடல்களை சமைத்து குழந்தைகள் பள்ளிக்கு எடுத்து செல்லும் உணவில் வைத்து அனுப்பி விடுவார்.

அதில் மிச்சமாகும் இறைச்சிகளை தெருவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இருக்கும் நபர்களிடம் பணத்திற்கு விற்பனை செய்துவிடுவார்.

அவர்கள் வீட்டிற்கு வந்ததற்கான அடையாளம் இல்லாத வகையில், அவர்களின் எலும்புகளை வீட்டின் பின்புறத்தில் வைத்து எரித்து விடுவார்கள்.

இது போன்று கிசெல் ஹெலனா (31), மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஃபால்சா (20) என்ற இரண்டு இளம்பெண்களை வீட்டின் உட்புறம் வைத்து ஜோர்ஜ் கொலை செய்தார்.

அதன் பிறகு ஜெசிகா என்ற சிறுமியை தன்னுடைய குழந்தைகளின் கண்முன் வைத்தே ப்ருனா கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஜோர்ஜ்க்கு 71 ஆண்டுகளும், இசபெல்க்கு 68 ஆண்டுகளும், மற்றொரு மனைவி ப்ருனாவிற்கு 71 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!