தப்பியோடி விட்டாரா நித்யானந்தா? இப்போ எங்க இருக்காரு தெரியுமா!


கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில், சுவாமி நித்யானந்தாவிற்கு ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த 2010ல் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆகியுள்ளது.

எனவே விசாரணை முடியும் வரை நித்யானந்தா பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் விசாரணைக்கு பயந்து, உடனடியாக நித்யானந்தா தலைமறைவாகி உள்ளதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தன்னிடம் பாஸ்போர்ட் இல்லாததால் விமானம் மூலம் எங்கும் செல்ல இயலாது.

ஆகையால் அண்டை நாடான நேபாளத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுள்ளார். அங்கு சிலர் உதவியுடன் பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ள ‘கெய்மன்’ தீவிற்கு தப்பி ஓடிவிட்டதாக சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!