பிறந்து 1 மாதமான பச்சிளங்குழந்தையை கடித்து குதறிய வளர்ப்பு நாய் – இங்கிலாந்தில் பரிதாபம்..!


இங்கிலாந்தில் பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை வீட்டின் வளர்ப்பு நாய் கடித்து கொன்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஸ்ஷையரில் பகுதியை சேர்ந்தவர்கள் டான் மெக்நுல்ட்டி (31) – எமி லிட்ச்பீல்ட் (28) தம்பதியினர்.

இவர்களுடைய வீட்டில் ஃபைஸ் மற்றும் டோட்டி என்ற இரு வளர்ப்பு நாய்கள் உள்ளனர். அவற்றை தங்களுடைய குழந்தைகளாக நினைத்தே இருவரும் வளர்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த எமிக்கு கடந்த மாதம் ரூபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. வீட்டின் அறையில் வைத்திருந்த குழந்தை ரூபனை, 28ம் தேதி இரு நாய்களும் கடித்து காயப்படுத்திவிட்டதாக பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ரூபன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். பெற்றோரின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்துவிட்டது என போலீசார் தெரிவித்ததோடு, இரண்டு நாய்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுகையில், நான் எமி கர்ப்பமாக இருக்கும் போதே, அவருடைய கணவரிடம் எச்சரிக்கை விடுத்தேன்.

குழந்தை பிறக்கப் போகிறது, இரண்டு நாய்களையும் என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர், இரண்டு நாய்களும் என்னுடைய குழந்தைகள். அவை இங்கு தான் இருக்கும் என கூறினார்.

இருந்தாலும் அவற்றிடம் கவனமாக இருங்கள் என சொல்லியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!