14 வயது சிறுவனால் பலாத்காரம்.. கொல்லப்பட்ட இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்..!


பிரித்தானியாவில் 14 வயது சிறுவனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது இறந்த உடலையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த இளம்பெண் கொல்லப்படுவதற்குமுன், கடைசியாக அவள் கொல்லப்பட்ட பூங்காவிற்கு செல்லும் CCTVகாட்சிகள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

தன்னைக் கொலை செய்வதற்காக அழைக்கிறான் என்று கூட தெரியாமல் அந்த சிறுவனை நம்பி பூங்காவிற்குச் சென்ற விக்டோரிஜா என்ற அந்த பெண் மீண்டும் உயிருடன் வீடு திரும்பவேயில்லை.

அவளது உயிரற்ற அரை நிர்வாணமான உடல் மட்டுமே பின்னர் வழிப்போக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அவளது உள்ளாடையில் இரண்டு பேரின் உயிரணுக்கள் கிடைத்தது வேறு, வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இன்னும் வழக்கு ஒரு தீர்வுக்கு வரவில்லை.

கைது செய்யப்பட்ட அந்த 14 வயது சிறுவன், தான் விக்டோரிஜாவுடன் பாலுறவு கொண்டது உண்மைதான் என்றும், அவளது சம்மதத்தின் பேரிலேயே இருவரும் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தாலும், தான் அவலைக் கொல்லவில்லை என்றே கூறி வருகிறான். இந்நிலையில் வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூங்காவில் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்த விக்டோரிஜா, சுத்தியல் அல்லது சுத்தியல் போன்ற ஒரு ஆயுதத்தால் குறைந்தது 21 முறை தக்கப்பட்டிருக்கிறாள்.

அந்த காயத்திலிருந்து இரத்தம் வெளியேறியதால் அவளது உயிர் பிரிந்திருக்கிறது. அவளை பாலியல் வன்புணர்வு செய்த அவன், அவள் இறந்த பிறகும் அவளது பிணத்துடன் உறவு கொண்டிருக்கிறான், எனவே இந்த கொலை முற்றிலும் பாலியல் நோக்கம் கொண்டது.

முகநூலில் சந்தித்துக்கொண்ட விக்டோரிஜாவும் அந்த சிறுவனும் நண்பர்களானதும், படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பின்னர் இருவருக்குள்ளும் சற்று பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இதைப் பொறுக்க இயலாத அந்த சிறுவன், அவளை ஏமாற்றி, தான் லண்டன் சென்று விட இருப்பதாகவும் அதற்கும் முன் சந்திக்கலாம் என்றும் அழைத்திருக்கிறான்.

விக்டோரிஜா, வீட்டில் பெற்றோர் இருப்பதாகக் கூற, அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு திருட்டுத்தனமாக ஓடி வந்து விடும்படி கூறியிருக்கிறான் அவன். ஆகவே அவனது நோக்கம் அவளை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது.

அதன்படியே அவன் அவளை துஷ்பிரயோகம் செய்ததோடு கொலையும் செய்திருக்கிறான் என்று தெரியவந்துள்ளது.

என்றாலும் அவன் இன்னும் தான் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளாததால் இன்றும் விசாரணை தொடர உள்ளது.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!