அவர் ஒரு சாணக்கியன் – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வடிவேலு புகழாராம்..!


முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி-யின் சிலை திறப்பு விழா கோலாகலமாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வா் நாராணசாமி ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். வடிவேலு பேசும் போது, “கலைஞர் அவர்கள் அரசியல் சாணக்கியனாக திகழ்ந்தார். சாணக்கியன் என்று சொல்வதை விட அதற்கும் மேலான ஏதேனும் சொல் இருக்கின்றதா என பார்க்கிறேன்.

அவரின் தைரியம், தன்னம்பிக்கை வேறு எந்த தலைவருக்கும் இருந்ததில்லை. அவரின் தைரியத்தைப் பார்த்து, பல இளைஞர்களுக்கு முன் மாதிரி வைத்துள்ளனர். கருணாநிதி நமக்கு கிடைத்த வரப்பிரசாதம், அவரின் கொள்கைகளால் வரலாற்றில் நிலைத்து நிற்பார். என பேசினார்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!