மயிரிழையில் உயிர் தப்பிய பிரபல மலையாள நடிகை… பியூட்டி பார்லரில் நடந்த திடுக் சம்பவம்..!


கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

கொச்சியில் லீனா மரியா பால் நடத்தி வரும் பியூட்டி பார்லரை நோக்கி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அப்போது லீனா மரியா பால் கடையில் இல்லை. 2 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.


சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, லீனா மரியாவுக்கு போன் செய்து ரூ.25 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொச்சி போலீசில் அவர் புகார் செய்தார்.

எனவே மும்பை தாதா, ஆத்திரத்தில் ஆட்களை அனுப்பி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். லீனா மரியா பால் அதிர்ச்சியில் உள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ரவி புஜாராவை தேடி மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!