பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – வசமாக சிக்கிய தமிழக வாலிபர்..!!


தமிழகத்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35) என்ற நபர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு, பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இன்னொரு இளம்பெண் இரவு நேரம் என்பதால் தூங்கிவிட்டார்.

இந்நிலையில், தனக்கு ஏதோ அசௌகரியமாக இருப்பதாக உணர்ந்த அப்பெண் கண் விழித்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சத்தம் போட்ட அந்த பெண், இது குறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, விமான நிலைய போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரபு ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு டெட்ராய்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிரபு ராமமூர்த்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!