கோபால் வீட்டு மரத்தில் பால் வடியுதாம்.. படையெடுக்கும் மக்கள் கூட்டம்..!


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து வருவாய் பகுதி என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோபால். இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் ஒரு வேப்பமரமும் இருக்கிறது. இந்த மரத்தில் சிவசக்தி சிவ நாக சக்தி சாமி உள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

அதனால் அந்த வேப்ப மரத்திற்கு தினமும் பூஜை செய்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் அந்த வேப்பமரம் ரொம்ப ஃபேமஸ் ஆனது.

இந்நிலையில் 2 நாளுக்கு முன்னாடி அந்த வேப்ப மரத்திலிருந்து திடீரென பால் வடிந்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்தனர் பொதுமக்கள். ஆனால் இன்று காலை முதல் அந்த மரத்தில் நிறைய அளவில் பால் வடிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த விஷயம் சுற்றுவட்டார பகுதி முழுசும் பரவிவிட்டது. எல்லோரும் கூட்டம் கூட்டமாக கோபால் வீட்டுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணெதிரே மரத்தில் இருந்து வழிந்து வரும் பாலை பார்த்து மக்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர்.

பொதுமக்களில் சிலர் மரத்துக்கு வழிபாடுகள், பூஜைகள் என இறங்கி விட்டார்கள். செல்வி, போட்டோ, வீடியோ என இன்னொரு பக்கம் நடக்கிறது. கோபால் வீட்டு தோட்ட மரத்தில் இருந்து பால் வடிவது பெரிய அளவில் அப்பகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!