வளைகாப்பு நிகழ்ச்சியின் மொய் பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு கொடுத்த தம்பதி..!


சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்த வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி பிரபாவதி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரபாவதி, 7 மாதம் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு நேற்று பொன்னம்மாபேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் விஜயன்-பிரபாவதி தம்பதியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், வளைகாப்பிற்கு வரும் அன்பளிப்புகளை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க விஜயன்-பிரபாவதி தம்பதியினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வளைகாப்புக்கு வந்தவர்கள் வழங்கிய மொய் பணத்தை அவர்கள் தனியாக ஒரு பெட்டியில் போட்டனர்.

அந்த பணத்தை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக கொண்டு சென்று வழங்கவும் முடிவு செய்துள்ளதாக விஜயன் தெரிவித்தார். தம்பதியினரின் இந்த முடிவால் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!