திடீரென விவாகரத்தை வாபஸ் பெற்றார் லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ்..!


திருமணம் முடிந்து 6 மாதத்திற்குள் மனைவியுடன் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி விவாக ரத்து கோரிய லாலுவின் மகன் தேஜ் தற்போது தனது விவாகரத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

முன்னாள் பீகார் மாநில முதல்வரும், மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் மகன் திருமணம் கடந்த மே மாதம் 12ந்தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமணம் முடிந்து 6 மாதம்கூட ஆகாத நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தேஜ் பிரதாப் பாட்னா குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘துயரத்துடன் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது விவாகரத்து மனுவை தேஜ் வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

லாலுவின் மகனான தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் பீகார் முதல்வர் தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை கடந்த மே 12-ம் தேதி திருமணம் பிரபலங்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கிடையில் தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மனைவியிடம் இரந்து விவாகரத்து கோரி தேஜ் பிரதாப் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

தேஜ் பிரதாப்பின் முடிவுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திடீரென வீட்டை விட்டு வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், இருவரின் குடும்பத்தினர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தேஜ்பிரதாப் யாதவ் விவகாரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.-source: patrikai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!