வர போவது ‘பேட்ட’ அடுத்தது கோட்டை’ மகிழ்ச்சி வெள்ளத்தில் ரஜினி ரசிகர்கள்..!


ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் இன்று காலையில் வெளியானது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே ரூ.120 கோடியை வசூல் செய்துள்ள இத்திரைப்படம், வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வரையில் வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 2.0 திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளிவந்த ரசிகர்கள் படத்தை சிலாகித்துள்ளனர். இதுதொடர்பாக ரஜினி ரசிகர்கள் கூறுகையில்,


“தலைவரின் இந்த படம் இந்தியாவில் இதுவரையில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். ஆங்கில படங்களே 2.0 முன் தோற்றுப் போகும். இதனை தமிழ் ராக்கர்ஸ் அல்ல, யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது. கண்ணாடி அணிந்தால் மட்டுமே படம் தெளிவாக தெரியும். இயக்குநர் ஷங்கர் மிக நேர்த்தியாக படத்தை வடிவமைத்துள்ளார்.

செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளை மிக அழகாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக இந்த திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தலைவர் நடிப்பில் அடுத்து வர போவது ‘பேட்ட’ அதற்கு பிறகு நாங்கள் பிடிப்போம் கோட்டை” என்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!