வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போதே உயிரை விட்ட மாணவர்கள்… நடந்தது என்ன?


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேற்கே பள்ளி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், பள்ளியின் மர சுவரை உடைத்து கொண்டு கார் ஒன்று வகுப்பறைக்குள் இன்று புகுந்துள்ளது.

அந்த அறையில் ஆசிரியர் மற்றும் 24 மாணவ மாணவியர்கள் இருந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 8 வயது நிறைந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 8 வயது கொண்ட இரு சிறுமிகள் மற்றும் 9 வயது நிறைந்த சிறுமி என மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

சிறிய காயங்களுடன் ஆசிரியர் மற்றும் 16 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதலில் காரின் ஓட்டுநரான 52 வயது பெண் மீட்கப்பட்டு உள்ளார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சில பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!