(12) தந்தை பெரியார் 1973.24, எம்.ஜி.ஆர் 1987.24, ஜெ. 2016.5, 2017ல்? அச்சத்தில் மக்கள்!


மரணங்களுக்கும் மாத கணக்குக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும், தமிழகத்திற்கு டிசம்பர் மாதம் மர்மமும், சோகமும் நிறைந்த மாதமாகவே திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இயற்கை பேரழிவுகளும், தமிழக தலைவர்களின் மரணங்களும் டிசம்பர் மாதத்திலேயே நிகழ்ந்துள்ளன.


இதுவரை டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.

முன்னாள் தமிழக முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியில் மறைந்தார்.

பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் அழைக்கப்படும் தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அன்று காலமானார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று மறைந்தார்.


2004 ஆம் ஆண்டு தெற்காசிய நாடுகளை தாக்கிய சுனாமி பேரலை சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கடுமையாக தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.


2015 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்தது. சென்னை உள்பட காஞ்சிபுரம், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இதிலும் பலர் உயிரிழந்தனர். பொருளாதார பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இரவு 11:3௦ மணி அளவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் அடைந்தார்.


ஜெ., மரணம் அடைந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே 7ம் தேதியன்று மூத்த பத்திரிக்கையாளரும், நாடக ஆசிரியரும், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பருமான சோ ராமசாமி காலமானார்.

அதே நேரத்தில், டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வர்தா புயல் சென்னையை கடுமையாக சூறையாடியது. இந்தாண்டு டிசம்பர் மாதம் துவங்கிய நிலையில் கன்னியாகுமரி அருகே ஓகி புயல் மையம் கொண்டுள்ளது.


அதனோடு, இன்னும் இரண்டு நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால், இந்த வருடம் டிசம்பர் மாதம் என்ன நடக்கபோகிறதோ..? என்கின்ற பீதி.., தமிழக மக்கள் மனதில் எழாமல் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!