ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவியிலிருந்து விலகுவதற்கு காரணம் இதுதானாம்…!


ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 83). இவர் வயதின் காரணமாகவும், உடல்நலப்பிரச்சினைகள் காரணமாகவும் தன்னால் அரச பதவிக்குரிய கடமைகளை செய்ய முடியவில்லை என்று கடந்த ஆண்டு தெரிவித்தார்.

மேலும் பதவி விலகவும் அவர் விருப்பம் தெரிவித்து நாட்டு மக்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் டெலிவிஷனில் உரை ஆற்றினார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்தவொரு மன்னரும் பதவி விலகியது இல்லை.

எனவே மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவது தொடர்பாக ஜப்பான் அரசு சட்ட மசோதா ஒன்றை தயாரித்து, மந்திரிசபையின் ஒப்புதலைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்கு பாராளுமன்றம் தனது ஒப்புதலை வழங்கி விட்டது.

இதையடுத்து மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஜப்பான் அரசு கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அகிஹிட்டோ, மன்னர் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஜப்பான் மன்னர் பொறுப்பில் இருந்து விலகும் நிகழ்ச்சியையும் புதிய பட்டத்து இளவரசர் பொறுப்பு ஏற்பதையும் ஜப்பான் மக்கள் கொண்டாட அரசு உரிய நடவடிக்கை என்றும் ஷின்சோ அபே தெரிவித்தார். மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு பட்டத்து இளவரசர் நருஹிட்டோ முறைப்படி மன்னராக முடிசூட்டப்படுவார்.

மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது. ஆனால் இளவரசி மேக்கோ, பொதுமக்களில் ஒருவரான கீ கொமுரு என்பவரை காதலித்து வருகிறார்.

அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இளவரசி அந்தஸ்தை விட்டுத்தருகிறார். எனவே அவரது திருமணத்துக்கு பின்னர் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!