பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் ஸ்டாலின் – தம்பிதுரை பேட்டி..!


மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரை அடுத்த புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலின் ஆரம்பத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிவிட்டு, தற்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும்போது தனது கட்சிக்காரர்களை போராட தூண்டி விட்டுள்ளார் என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.

பெட்டி சாவி மத்திய அரசின் கையில் உள்ளது, அவர்கள் பெட்டியை திறந்தால் தான் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும் என கூறினார்.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!