உடை இல்லா காலத்திலும் இறந்தவர்களுக்கு பஞ்சாடை உடுத்திய தமிழன் – அதிர்ச்சி தகவல்…?


உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆடையின்றி அலைந்த காலத்தில் தமிழன் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு கூட பஞ்சாடை உடுத்தி மரியாதையாக இறுதிச் சடங்கை செய்துள்ளான் என்று கூறியது ஆதிச்சநல்லூர் ஆய்வு.

அதை ஆய்வு செய்த தலைமை அகழாய்வாளர் சொல்கிறார் “ஆதிச்சநல்லூர் ஆய்வின் உண்மை நிலையை விரிவாக விளக்கினால் இந்திய வரலாற்று நூல்கள் அனைத்தும் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும்” என்று.

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட தொல் இடங்கள் அகழ்வாய்வில் இருக்கிறது. அதில் முக்கியமான இடங்கள் ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடி.

உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக்கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் “கிரௌன் மில்ன்”.

இவர் மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளைப் பார்த்துவிட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் மாமல்லபுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார்.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையதுதான். நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் தோன்றிய இந்தக் கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440இல் பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது .

இரண்டாம் தமிழ்ச் சங்கம் ‘கபாடபுரம்’ நகரத்தில் கி.மு 3700இல் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது .

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 இல் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் காலத்தால் மிகப் பழமையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது தமிழகத்தில்தான்.

ஆக உலகம் முழுவதும் தமிழரே தமது கலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தார்கள் என்றும் உறுதியானாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகமே.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் . இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு, விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் , நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!