நாளை மதுசூதனன், தினகரன் வேட்பு மனுத்தாக்கல்…!


ஆர்.கே.நகர் தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள மதுசூதனன் நாளை வேட்புமனுதாக்கல் செய்கிறார்.

இந்த தகவலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல் – அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.


மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரனும் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். இவர் நாளை மதியம் 12 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

கடந்த முறை தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை கேட்டு பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர் கட்சியினருடன் தினகரன் ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். பின்னர் 3-ந்தேதி தண்டையார்பேட்டை ஏ.என்.என்.மண்டபத்தில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். இதில் அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!