எந்த 7 பேர் என கேட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய ரஜினி – அதிர்ச்சி வீடியோ..!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ‘எந்த 7 பேர்?’ என்று மறு கேள்வி கேட்ட ரஜினிகாந்தை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து செய்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம்” என்றார்.

அவரிடம்பாஜகவை எதிர்த்து மிகப்பெரிய கூட்டணி உருவாக்க நினைக்கிறார்கள். பாஜக அவ்வளவு ஆபத்தான கட்சியா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள்; அப்போது கண்டிப்பாக அப்படித்தானே இருக்க முடியும்” என்றார். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்தியதில் தவறு இருந்தது.அது விரிவாக பேச வேண்டிய விஷயம்” என்றார்.

இதனையடுத்து 7பேர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “எந்த 7 பேர்” என்று கேட்டார். பின்னர் அவருக்கு செய்தியாளர்கள் விளக்கினர். இதுகுறித்து பின்னர் கருத்து கூறுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தே தெரியாதவர் என்று ரஜினிகாந்தை பலரும் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.-source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!