தலையில் கல்லைப்போட்டு மூதாட்டி கொடூரக்கொலை – அதிர வைத்த காரணம்..!


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நீண்டகாலமாக பிச்சை எடுத்து வந்தார்.

இரவில் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் முன்பு தங்குவார். நேற்றும் வழக்கம்போல் கோவில் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டி தலையில் கல்லைப் போட்டனர். இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் சாத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மூதாட்டி நீண்ட காலமாக பிச்சை எடுத்து வந்தாலும் அவரது பெயர், ஊர் விவரம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் அவரிடம் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.-source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!