பிரபல செய்தி ஊடகவியலாளர் அதிரடியாக கைது..!! பரபரப்பில் மக்கள்..!!


நேற்று மாலை குறிப்பிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வவுனியா பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைத்துள்ளனர். அவர் அங்கு சென்றபோது அவரை கைதுசெய்து வாக்குமூலத்தை பதிவுசெய்துவிட்டு தடுத்து வைத்துள்ளனர் .

சம்பவத்தை கேள்வியுற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகளையும் , சக ஊடகவியலாளர்களையும் , ஊடகவியலாளர்களின் அழைப்பின்பேரில் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உள்ளிட்டவர்களையும் அங்கிருந்த பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரை பார்வையிடமுடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தடுப்புக்காவலில் இருக்கும் ஊடகவியலாளரிடம் சம்பவத்தை அறிவதற்கும் அவரது பக்க நியாயத்தை வினாவுவதற்கும் ஊடகவியலாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தினால் நள்ளிரவு 1.00 மணிவரை காத்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த ஊடகவியாளார் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் பணியாற்றும் ஊடகத்தின் பணிப்பாளரிடம் வினவியபோது அன்மையில் வவுனியாவில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை செய்திக்காக எடுத்துச்செல்லும் போது தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியதாக தெரிவித்தார்.source-virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!