‘எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை’ சென்னையில் விஜயகாந்த் பேட்டி…!


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று காலை சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும் சென்றார்.

சிங்கப்பூர் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:–

ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. ஆதரவு யாருக்கும் கிடையாது. ஆனால் ஆர்.கே.நகரில் உள்ள தே.மு.தி.க தொண்டர்களுக்கு எந்தவித கட்டுபாடும் இல்லை.

ஆர்.கே.நகரில் வீடு, வீடாக சென்று மாலை 5 மணி வரை தான் ஓட்டு சேகரிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, ஒட்டுக்கு பணம் தருபவர்கள் தான் எதிர்ப்பார்கள். பணம் கொடுக்காதவர்கள் அது சரி தான் என்பார்கள். ஆளும்கட்சியில் உட்கட்சி பிரச்சினை நிலவுகிறது.

மக்கள் நலனில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதான். பள்ளி மாணவர்களின் தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசின் அவலநிலையை கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். செவிலியர்கள் போராட்டம் பற்றி கேட்டதற்கு, தனக்கு அதுபற்றி தெரியவில்லை என்று விஜயகாந்த் பதில் அளித்தார்.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!