தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்களுக்கு நடந்த சோகம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!


டெல்லியின் நங்லாய் ரெயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரெயில் வந்துள்ளது. ஆனால், போதையில் இருந்தவர்கள் ரெயில் வருவதைக் கவனிக்கவில்லை.

எனவே, அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!