பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த விசித்திர தண்டனை…!


மராட்டிய மாநிலம் லத்தூரில் 11 வகுப்பு மாணவி திருமணம் செய்துக் கொள்வதாக ராணுவ வீரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ராணுவ வீரருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார், இதனையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது.

பாதிக்கப்பட்ட மாணவி நேற்று பேசுகையில், “நான் பள்ளியில் என்னுடைய படிப்பை தொடர்ந்தால் எங்களுடைய நன்மதிப்பு அழிந்துவிடும் என கூறி பள்ளி நிர்வாகம் என்னுடைய சேர்க்கையை சஸ்பெண்ட் செய்துவிட்டது,”என கூறிஉள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டனர் எனவும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட எஸ்.பி. சிவராஜி ரத்தோரை சந்தித்து புகார் தெரிவித்து உள்ளார், இதனையடுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது, பாலியல் பலாத்காரம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே பள்ளி நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!