காசால் கைக்கூடிய கள்ளகாதல்… அதிர்ச்சியில் கணவன் செய்த வெறிச்செயல்..!!


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமம் அறச்சலூர். இந்த கிராமத்தை சார்ந்தவர் தீபா., இவருடைய வயது 23. இவருக்கும் அதே பகுதியை சார்ந்த குமார் (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில்., இவர்களுக்கு 5 வயதுடைய மகன் இருக்கிறார்.

இந்நிலையில் இந்த பெண் ரூ.20 நோட்டில் தனது அலைபேசியின் எண்ணை எழுதி., அந்த ரூபாயை கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளார். இந்த ரூ.20 ஆனது பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து கோயம்புத்தூரை அடுத்துள்ள ஜல்லிபட்டியை சார்ந்த செந்தில்குமார் என்பவருக்கு கிடைத்துள்ளது.

அந்த ரூபாய் நோட்டில் அலைபேசி எண்ணானது எழுதப்பட்டிருப்பதை கண்ட அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகையில்., மறுமுனையில் அந்த பெண் பேசியுள்ளார். இவர்களின் முதல் அழைப்பிலேயே இருவரும் காதலர்கள் போலவே பேசத்தொடங்கியுள்ளனர்.

பின்னர் அடிக்கடி இவர்கள் இருவரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்., இதில் அந்த நபர் எத்தனை நாட்கள் தான் அலைபேசியிலேயே பேசுவது., நேராக சந்திக்க கூறி கள்ளகாதலான் கேள்வி வைக்கவே., கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே சந்திக்க துவங்கியுள்ளனர்.

மேலும் அந்த முதல் சந்திப்பிற்கு பின்னர் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உலா வந்துள்ளனர். இதனை அறிந்த இவரின் கணவர் இதுகுறித்து இவரை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விசயம் குறித்து தனது கள்ளகாதலனுக்கு இந்த விசயத்தினை கூறவே., இவர்களின் திட்டப்படி கடந்த 19 ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறினார். வேலைக்கு சென்ற கணவன் தனது வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர் வீடுகள் மற்றும் பலஇடங்களில் தேடியுள்ளார்.

பின்னர் சம்பவ குறித்து பெண்ணின் தாயாரிடம் தெரிவித்த கணவர்., பெண்ணின் தாயாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சம்பவத்தினை கூறி புகார் அளித்துள்ளார். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து. செந்தில்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணை மீட்டனர்.source-netrigun

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!