சாலையில் பேசியபடி சென்ற இரு பெண்கள்… நொடிப்பொழுதில் நடந்த பேரதிர்ச்சி – வீடியோ..!


துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள், பாதாள சாக்கடைக்குள் விழுந்து இருக்கிறார்கள்.

துருக்கியின் டியார்பகிர் நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையும், நடைமேடையும் இணையும் பகுதி மொத்தமாக உடைந்து விழுந்துள்ளது.

கீழே ஓடிய சாக்கடையின் குழாயும் உடைந்த காரணத்தால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அது புதிதாக கட்டப்பட்ட நடைமேடை என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

இரண்டு பேர்

அந்த பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்படும் சமயத்தில் அங்கு இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஒருவர் பெயர் டாக்டர் சூசன் குடெ பாலிக் என்றும், இனொருவர் பெயர் ஓஸ்லாம் துயாம்ஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நான்கு மணிக்கு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

இணையத்தில் வீடியோ

இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது சாலை அப்படியே உடைந்து உள்ளே சென்றுள்ளது. இது அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி பதிவு தற்போது வெளியாகி இருக்கிறது. இது பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

மீட்பு பணி

இந்த சாலையும் நடைமேடையும் இணையும் பகுதி உடைந்து சாக்கடைக்குள் சென்றதால், இரண்டு பெண்களும் பூமிக்கு அடியில் சிக்கி இருந்துள்ளனர். இவர்களை மீட்க 4 மணி நேரம் மீட்பு படை வீரர்கள் போராடினார்கள். ஒரு பெண்மணி மட்டும் அதிக ஆழத்தில் சிக்கி இருந்துள்ளார்.

எப்படி இருக்கிறார்கள்

ஆனால் இவர்கள் இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!