உன் கண்கள் என்ன கூர்வாளா… மற்றொரு பாடகிக்கு நூல்விட்ட வைரமுத்து…!


பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மேலும் பலர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மற்றுமொரு பெண் பாடகியான புவனா ஷேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பின்னணி பாடகியான புவனா ஷேசன் வைரமுத்துவால் 22 வருடங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடை விளம்பரத்துக்காக பாடல் ஒன்றை பாட சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது வைரமுத்து, உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. பாடி முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று கூறி என்னிடம் தொலைபேசி எண்ணை வாங்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, பல இசையமைப்பாளர்களிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினார். போகப்போக, உன் கண்கள் என்ன கூர்வாளா. என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என்றெல்லாம் பேசி எனக்கு காதல் வலை வீசத்துவங்கனார்.


எனக்கு அவரது நோக்கம் புரிந்தது. ஆனாலும் நான் புரியாதது போல நடித்தேன். பிறகு பல முறை என்னை தொடர்பு கொண்டு மலேஷியா வருகிறாயா என கேட்டு தொந்தரவு செய்தார்.

அதோடு, அட்ஜஸ்ட் பண்ணி நடந்துகிட்டா லைஃப்ல அழகாக செட்டில் ஆகிவிடலாம் என்றார்.

நான் அவரது விருப்பத்துக்கு உடன்படவில்லை. ஆகவே என்னை மிரட்டவும் செய்தார். அதாவது, என்னால் திரைத்துறையில் வாய்ப்பே பெற முடியாமல் செய்துவிடுவதாக மிரட்டினார்.

அவர் கூறியது போலவே எனக்கு செல்லும் இடமெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் மேடைப்பாடகியாகவே இன்றும் இருக்கிறேன்” என்று பாடகர் தொழிலை விட்டுவிட்டு நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன் என்று அந்த பதிவில் புவனா ஷேசன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!