மக்கள் செல்வன் உட்பட பல நடிகர்களை உருவாக்கிய கூத்துப்பட்டறை நிறுவனர் மரணம்..!


சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவிய நா.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர். விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

கடந்த 1999-ஆம் ஆண்டில் இந்திய அரசின் சங்கீத அகாடமி விருதை பெற்றுள்ளார். முத்துச்சாமி எழுதிய நா.முத்துசாமி கட்டுரைகள் என்ற நூல் 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருதை வென்றது. முத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!