கோவிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்ட பிரபல பாடகி…!


கேரளவில் வைக்கம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த இவர், கர்நாடக இசை பயின்றவர். இதுமட்டுமில்லை, ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர் வைக்கம் விஜயலட்சுமி. கிடைப்பதற்கே மிகவும் அரிதான இந்த இசைக்கருவியை, அவ்வளவு எளிதாக யாரும் வாசித்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த விஜயலட்சுமி என்ற கேட்பவருக்கு தன் ‘செல்லுலாய்டு’ என்ற மலையாளப் படத்தில் வைக்கம் இவர் பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதையும் சினிமாவில் தன்னுடைய குரலால் சிறப்புக் கவனம் பெற்றார். அதன்பிறகு மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி ரசிகர்களால் கிரும்பப்பட்ட பாடகியாக மாறினார்.

இவர் த்மிழில் பாடிய முதல படல் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘குக்கூ’ படத்தில் இடம்பெற்ற ‘கோடையில மழ போல’ பாடல்தான் தமிழில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய முதல் பாடலாகும். அதன்பின் ‘என்னமோ ஏதோ’, ‘வெள்ளக்கார துரை’, ‘தெறி’, ‘வீர சிவாஜி’ என பல படங்களில் பாடியுள்ளார்.

ஊனம் ஒரு குறையில்லை வாழ்விற்கு முயற்சியே முலதனமாக கொண்டு செயல்பட்டவர் வைக்கம் விஜயலட்சுமிக்கும் இவருக்கும் மிமிக்ரி கலைஞரான கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.

பாடகி விஜயலட்சுமியின் குடும்ப நண்பரான அனூப், இன்டீரியர் டிசைனர். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று (அக்டோபர் 22) திருமணம் நடைபெற்றது.விஜயலட்சுமியின் பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.அவருக்கு நீங்களும் உங்கள் வாழ்த்தை தெரிவியுங்கள்.-Source: DINASUVADU

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!