உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை கொன்று விவசாயி எடுத்த விபரீத முடிவு..!


எட்டயபுரம் அருகே வெங்கடாச்சலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சூசைமரியான். இவரது மனைவி பாத்திமாமேரி (வயது 36). இதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (50). விவசாயி. இவரது மனைவி சூசைபாத்திமா. அந்தோணிராஜூக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பாத்திமாமேரி கூலி வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கும், அந்தோணி ராஜூக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதல் விபரம் தெரிந்தவுடன் சூசைபாத்திமா தனது கணவர் அந்தோணிராஜை கண்டித்துள்ளார். இதே போல் கள்ளக்காதலை கைவிடுமாறு சூசைமரியானும் தனது மனைவி பாத்திமாமேரியை கண்டித்துள்ளார். இதையடுத்து அவர் கடந்த 3 மாதமாக அந்தோணிராஜை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். இது அந்தோணி ராஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அந்தோணிராஜ் தனது ஆசைக்கு இணங்குமாறு தொடர்ந்து பாத்திமாமேரியை வற்புறுத்தி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆசைக்கு இணங்க மறுத்தால் கொன்றுவிடுவேன் என பாத்திமாமேரிக்கு, அந்தோணிராஜ் கொலைமிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பாத்திமாமேரி அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்தோணிராஜ் இது குறித்து பாத்திமாமேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் பாத்திமாமேரியை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் சிறிது தூரம் சென்ற அந்தோணிராஜ் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரும் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா, தனிப்பிரிவு ஏட்டு ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட பாத்திமாமேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது போல தற்கொலை செய்து கொண்ட அந்தோணிராஜ் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!