நாட்டாமை நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த விருமாண்டி பட துணை நடிகர்..!


திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ராணி. இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

இதுதவிர நந்தினி சீரியலிலும் நடித்து வருகிறார். அண்மையில் துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது உடன் நடித்த துணை நடிகர் சண்முகராஜன் ராணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராணி, சண்முகராஜன் மீது செங்குன்றம் போலீஸில் புகார் அளித்தார். சண்முகராஜன் விருமாண்டி படத்தில் நடித்துள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!