அத்து மீறி மைதானத்திற்குள் நுழைந்த விராட் கோலி ரசிகரால் பரபரப்பு..!!


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை நோக்கி ஓடினார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அத்துடன் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்து விராட் கோலி அந்த ரசிகரிடம் இருந்து விலகினார்.

பின்னர் அந்த ரசிகர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விரும்பினார். விராட் கோலி சம்மதம் தெரிவிக்க மகிழ்ச்சியுடன் அந்த ரசிகர் செல்பி எடுத்தார்.

ஏற்கனவே ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்டின்போதும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இரண்டு முறை பாதுகாப்பு அதிகாரிகளை மீறி ரசிகர்கள் தன்னை நோக்கி ஓடி வந்ததால் கோலி அப்செட் ஆகியுள்ளார்.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!