பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகா பற்றி மும்தாஜ் என்ன சொன்னார் தெரியுமா..?


ரித்விகா வெற்றி பெறுவார் என்று எனக்கு 7வது வாரத்திலேயே தெரிந்து விட்டது. காரணம் அந்தளவிற்கு அவர் விதிகளை பின்பற்றினார் என்று நடிகை மும்தாஜ் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸில் சீசன்-2 நிறைவடைந்துள்ளது. இதன் வெற்றியாளராக அனைவரும் நினைத்தப்படி ரித்விகா தேர்வானார். இந்நிலையில் இதில் பங்குப்பெற்ற மும்தாஜ் ஒரு பேட்டியில் ரித்விகாவின் வெற்றியை பற்றி கூறியுள்ளார்.

அதில், ரித்விகா வெற்றி பெறுவார் என்று எனக்கு 6, 7வது வாரத்திலேயே தெரிந்துவிட்டது. ஏனெனில் அவர் தான் ஆரம்பத்தை விட போக போக நல்லா மெச்சூர்ட் ஆனார். வீட்டின் கேப்டன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ரித்விகா தான் அனைவரும் பிக்பாஸ் ரூல்ஸை மீறாமல் பார்த்து கொள்வார். யாராவது மைக் போடாமல் இருந்தால் முதலில் தைரியமாக சொல்வது அவர் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.-Source: vivegam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!