மூளை வளர்ச்சி குன்றிய மகளை கொலை செய்த பெற்றோர் – பின்ணனியில் திடுக் தகவல்..!


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைக்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவரும் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகள் சாதனா (வயது 9). மூளை வளர்ச்சி குன்றிய சாதனாவை பல மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் மகள் படும் துயரத்தை கண்டு முனீஸ்வரன்- ரேவதி விரக்தியில் இருந்தனர்.

இதையடுத்து அவர்கள் மகளை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1-ந்தேதி சாதனாவை நாகபாளையத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமி கும்பிட்ட பின்னர் 2 பேரும் மனதை கல்லாக்கி கொண்டு சாதனாவுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்தனர்.

இதை சாப்பிட்ட சாதனா சிறிது நேரத்தில் மயங்கினாள். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது சிறுமிக்கு வி‌ஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

உடனே அவர்கள் சாதனாவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆபத்தான நிலையில் சாதனா சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். மூளை வளர்ச்சி குன்றிய மகளை பெற்றோரே கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!