என் பொண்டாட்டி மிரட்டுரா.. போலீஸ் பாதுகாப்பு வேணும் – கதறும் பிரபல விளையாட்டு வீரர்..!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் ஹசின் ஜஹான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.

முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள் என ஜஹான் கூறி இருந்தார்.இதனை முகமது ஷமி மறுத்து இருந்தார்.

முகமது ஷமி-ஹஸின் ஜஹான் சாகா விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை .

ஆஜ் தக் அறிக்கையின்படி, தனக்கு முன்னாள் மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து உள்ளது தனக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு தேவை என கூறி உள்ளார்.

ஷமி மாவட்ட நீதிபதிக்கு அளீத்துள்ள ஒரு மனுவில் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதிகாப்பு கேட்டு ரிநுதார் மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.மாவட்ட நீதிபதி தனது கீழ்நிலை அதிகாரிகளை மனுவைப் பரிசீலுக்கும் படி கேட்டு கொண்டுள்ளார்.

முகமது ஷமி அளிக்கபட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

கொல்கத்தாவில் ஒரு பள்ளியில் தங்கள் மகளை சேர்க்க பணம் தருமாறு கடந்த மாதம் ஜஹான் ஷமி கிரிக்கெட் ஆசிரியரான சுமன் சக்ரவர்தியை அனுப்பிய இருந்தார். பணம் கேட்க மூன்றாவது நபரை அனுப்பியதற்காக ஷமி கோபப்பட்டு இருந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடரில் முகமது ஷமி அதிக விக்கெட் எடுத்த 4 வீரராக சாதனை புரிந்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!