விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த சோகம்..! அதிர்ச்சியில் பெற்றோர்..!!


மதுரை மாவட்டம், கீரைத்துறை லாலாபிள்ளை குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் பிரசன்னா ( 6).அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

பிரசன்னா, நேற்று காலை வீட்டின் மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரசன்னாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தான்.

இது பற்றி கீரைத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.source-seitipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!